மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பலரும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்துக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி, ''அயோத்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி, அதேசமயம் பார்க்கிங் தரமான படம், விருதுக்கு உரிய படம். அதற்காக விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். அயோத்தி படம் விருது பட்டியலில் இருந்தது. ஆனால், அடுத்த கட்ட தேர்வுகளில் அது நகரவில்லை. அதனால் விருது கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே விருது ஜூரியாக இருந்தார். டில்லியிலும் மற்ற மொழி ஜூரி ஆதிக்கம். அதனால், இந்தமுறை 4 விருது கிடைத்ததே பெரிய விஷயம். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கருக்கு போராடிதான் சிறந்த துணை நடிகர் விருது வாங்கியுள்ளனர் என தகவல் வருகிறது.