அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் |
சென்னையில் நடந்த ‛ரெட் பிளவர்' படவிழாவில் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், இனி வரும் காலங்களில் முதல் 3 நாட்கள், தியேட்டர் வாசல்களில் பப்ளிக் ரிவியூ எடுக்க யு-டியூப் சேனல்கள், மீடியாவை அனுமதிக்ககூடாது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதல் 3 நாட்கள் படம் ஓடினால் நல்லது. அடுத்த வசூலையும் இப்படிப்பட்ட ரிவியூ கெடுத்து விடுகின்றன என்று பேசினார்.
விஷால் பேச்சுக்கு ஓரளவு ஆதரவும், நிறைய எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக, சினிமாவில் உள்ளவர்கள் விஷால் சொல்வதை ஏற்க முடியாது. சின்ன படங்களுக்கு பப்ளிக் ரிவியூ அவசியம், படம் நல்லா இருந்தால் ஓடும், இல்லாவிட்டால் என்ன செய்தாலும் ஓடாது என்றனர்.
விஷால் பேசியபின் பல படங்கள் வந்துவிட்டன. அந்த சமயங்களில் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்தில் பேட்டி எடுக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த சினிமா சங்கமும் இந்த விஷயத்தில் கூடி பேசி எந்த முடிவும் எடுக்கவில்லை. விஷால் பேச்சை பலரும் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.