நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
சென்னையில் நடந்த ‛ரெட் பிளவர்' படவிழாவில் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், இனி வரும் காலங்களில் முதல் 3 நாட்கள், தியேட்டர் வாசல்களில் பப்ளிக் ரிவியூ எடுக்க யு-டியூப் சேனல்கள், மீடியாவை அனுமதிக்ககூடாது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதல் 3 நாட்கள் படம் ஓடினால் நல்லது. அடுத்த வசூலையும் இப்படிப்பட்ட ரிவியூ கெடுத்து விடுகின்றன என்று பேசினார்.
விஷால் பேச்சுக்கு ஓரளவு ஆதரவும், நிறைய எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக, சினிமாவில் உள்ளவர்கள் விஷால் சொல்வதை ஏற்க முடியாது. சின்ன படங்களுக்கு பப்ளிக் ரிவியூ அவசியம், படம் நல்லா இருந்தால் ஓடும், இல்லாவிட்டால் என்ன செய்தாலும் ஓடாது என்றனர்.
விஷால் பேசியபின் பல படங்கள் வந்துவிட்டன. அந்த சமயங்களில் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்தில் பேட்டி எடுக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த சினிமா சங்கமும் இந்த விஷயத்தில் கூடி பேசி எந்த முடிவும் எடுக்கவில்லை. விஷால் பேச்சை பலரும் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.