சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். அவர் நடித்துள்ள பான் இந்தியா படமான 'சாகுந்தலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து டுவிட்டரில் ஒருவர், “சமந்தாவுக்காக வருந்துகிறோம். அவர் தன்னுடைய அழகு, பிரகாசம் முழுவதையும் இழந்துவிட்டார். விவாகரத்திலிருந்து அவர் மீண்டு வருவார், மேலும் அவரது திரையுலகப் பயணம் உயரத்தைத் தொடும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், தசை அழற்சி நோய் அவரை பெரிதும் பாதித்து, அவரை மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த டுவீட்டை பகிர்ந்து அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா. “எனக்கு நடந்ததைப் போல நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு எப்போதும் செல்ல வேண்டாம் என பிரார்த்திக்கிறேன். உங்கள் பிரகாசத்தை மேலும் சேர்க்க என்னிடமிருந்து சில அன்புகளைத் தருகிறேன்,” என வெள்ளை நிற 'ஹாட்டின்' எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் கருத்துக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.