300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சகுந்தலம். இயக்குனர் குணசேகர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று உலகளவில் ரூ.7 கோடி மட்டும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தில் ராஜூ இந்த படம் குறித்து வேதனையாக பேசியுள்ளார். அதன்படி, சகுந்தலம் படம் 3டி தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ரூ. 22 கோடியாக குறைந்துள்ளது இல்லையெனில், பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் தில் ராஜூ.