ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் |
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சகுந்தலம். இயக்குனர் குணசேகர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று உலகளவில் ரூ.7 கோடி மட்டும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தில் ராஜூ இந்த படம் குறித்து வேதனையாக பேசியுள்ளார். அதன்படி, சகுந்தலம் படம் 3டி தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ரூ. 22 கோடியாக குறைந்துள்ளது இல்லையெனில், பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் தில் ராஜூ.