இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
தமிழில் 'பொன்னியின் செல்வன்', கன்னடத்தில் 'காந்தாரா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான அன்றே பான் இந்தியா படமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும், ஹிந்தியில் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.
அதே சமயம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான 'காந்தாரா' படம் தெலுங்கில் சுமார் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகை 'பொன்னியின் செல்வன்' படத்தின் வசூலை விட அதிகம். தெலுங்கில் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட 'காந்தாரா' 15 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.