வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தமிழில் 'பொன்னியின் செல்வன்', கன்னடத்தில் 'காந்தாரா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான அன்றே பான் இந்தியா படமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும், ஹிந்தியில் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.
அதே சமயம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான 'காந்தாரா' படம் தெலுங்கில் சுமார் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகை 'பொன்னியின் செல்வன்' படத்தின் வசூலை விட அதிகம். தெலுங்கில் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட 'காந்தாரா' 15 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.




