டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருவதால் சென்னை அண்ணா சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அங்கே படையெடுத்தார்கள். அஜித் இருந்த கேரவனை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதையடுத்து கதவை திறந்து உள்ளே நின்றபடியே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து சென்றார் அஜித்குமார். அப்படி அவர் கேரவனுக்குள் நின்றபடி ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .