பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சினிமாவில் வில்லன் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு ஒரு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து சோசியல் மீடியாவில், 56 வயது நபர் 23 வயதை பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பலரும் இந்த செய்தியை பரபரப்பாக்கி வருகிறார்கள்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பப்லு அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இது குறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான் எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அதனால் அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் பப்லு இன்னும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேல்தான் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.