டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இங்கிலாந்து நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர் லார்ட் வேவர்லி நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். உலகளாவிய கலாச்சாரத்தை உலகெங்கும் பறை சாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தனர்.
சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது
“கமல்ஹாசன் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு, உலகில் அவர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்" என்று லார்ட் வேவர்லி கூறியிருக்கிறார். “நம்முடைய மக்கள் மற்றும் மக்களின் வளர்ச்சியைப் பற்றிய அறிவை உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. லார்ட் வேவர்லீ என்னை சந்தித்ததற்கு நன்றி, விரைவில் மீண்டும் சந்திப்போம்”.என்று கமல் கூறினார்.




