ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை(செப்., 15) ரிலீஸாக உள்ளது.
இந்த படத்திற்கு தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை, ஐகோர்ட் வழக்கு தொடரப்பட்டது. அதில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க கவுதம் மேனன் ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து "வெந்து தணிந்தது காடு" படம் எடுக்கப்பட்டு வெளியாக உள்ளது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனால் நாளை வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் திட்டமிட்டப்படி படம் நாளை வெளியாகிறது.




