ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை(செப்., 15) ரிலீஸாக உள்ளது.
இந்த படத்திற்கு தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை, ஐகோர்ட் வழக்கு தொடரப்பட்டது. அதில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க கவுதம் மேனன் ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து "வெந்து தணிந்தது காடு" படம் எடுக்கப்பட்டு வெளியாக உள்ளது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனால் நாளை வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் திட்டமிட்டப்படி படம் நாளை வெளியாகிறது.