ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான மற்றொரு அணியினரும் களமிறங்கினர்.
இதில் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். செயலாளராக பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத்தலைவர்களாக எஸ்ஏசியின் ரவி மரியாவும், பாக்யராஜ் அணியின் யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்ஏசியின் சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்ஏசி அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியின் பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயங்குனர் கே.பாக்யராஜ் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் உறுதி மொழியை வாசிக்க தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை ஏற்ற பிறகு அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி செந்திநாதன் வழங்கினார். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.