ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தழுவி கேப்டன் பிரபாகரன் முதல் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. சின்னத்திரை தொடர்களும் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீரப்பனின் முழு வாழ்க்கையும் வெப் தொடராக தயாராகிறது. இதனை ஏற்கெனவே வீரப்பனின் வாழ்க்கையை கன்னடத்தில் வீரப்பன் அட்டகாஹசா என்ற பெயரிலும், தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் படமாக இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இந்த தொடரும் கன்னடம், தமிழில் தயாராகிறது. கிஷோர் வீரப்பனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கெனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் வீரப்பனை கொடுமைக்காரனாக சித்தரித்து வீரப்பன் அட்டஹாசா என்ற தலைப்பில் படமாக இயக்கினார். இப்போது மீண்டும் அதனை தொடராக இயக்குகிறார். தொடரின் முழு ஸ்கிரிப்டும் எனக்கு வழங்கப்பட வேண்டும், என் அனுமதியின்றி படமாக்க கூடாது. என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.