வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தழுவி கேப்டன் பிரபாகரன் முதல் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. சின்னத்திரை தொடர்களும் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீரப்பனின் முழு வாழ்க்கையும் வெப் தொடராக தயாராகிறது. இதனை ஏற்கெனவே வீரப்பனின் வாழ்க்கையை கன்னடத்தில் வீரப்பன் அட்டகாஹசா என்ற பெயரிலும், தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் படமாக இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இந்த தொடரும் கன்னடம், தமிழில் தயாராகிறது. கிஷோர் வீரப்பனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கெனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் வீரப்பனை கொடுமைக்காரனாக சித்தரித்து வீரப்பன் அட்டஹாசா என்ற தலைப்பில் படமாக இயக்கினார். இப்போது மீண்டும் அதனை தொடராக இயக்குகிறார். தொடரின் முழு ஸ்கிரிப்டும் எனக்கு வழங்கப்பட வேண்டும், என் அனுமதியின்றி படமாக்க கூடாது. என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.




