புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தழுவி கேப்டன் பிரபாகரன் முதல் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. சின்னத்திரை தொடர்களும் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீரப்பனின் முழு வாழ்க்கையும் வெப் தொடராக தயாராகிறது. இதனை ஏற்கெனவே வீரப்பனின் வாழ்க்கையை கன்னடத்தில் வீரப்பன் அட்டகாஹசா என்ற பெயரிலும், தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் படமாக இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இந்த தொடரும் கன்னடம், தமிழில் தயாராகிறது. கிஷோர் வீரப்பனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கெனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் வீரப்பனை கொடுமைக்காரனாக சித்தரித்து வீரப்பன் அட்டஹாசா என்ற தலைப்பில் படமாக இயக்கினார். இப்போது மீண்டும் அதனை தொடராக இயக்குகிறார். தொடரின் முழு ஸ்கிரிப்டும் எனக்கு வழங்கப்பட வேண்டும், என் அனுமதியின்றி படமாக்க கூடாது. என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.