மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். கடந்தவாரம் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள விருமன் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவதே சிறந்தது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் இருந்து கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இதன் பிறகு நான் இந்து கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. மதுரை மீனாட்சி அம்மனின் பெரிய பக்தன். எந்த வேலையை செய்தாலும் கடவுளை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பேன் என்று சொல்லி அதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. அதையடுத்து சுதந்திர தின விழாவின்போது மாப்பு குச்சியில் தேசிய கொடியை ஏற்றி விமர்சனங்களுக்கு உள்ளானார் சூரி. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூரி. அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.