இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். கடந்தவாரம் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள விருமன் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவதே சிறந்தது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் இருந்து கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இதன் பிறகு நான் இந்து கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. மதுரை மீனாட்சி அம்மனின் பெரிய பக்தன். எந்த வேலையை செய்தாலும் கடவுளை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பேன் என்று சொல்லி அதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. அதையடுத்து சுதந்திர தின விழாவின்போது மாப்பு குச்சியில் தேசிய கொடியை ஏற்றி விமர்சனங்களுக்கு உள்ளானார் சூரி. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூரி. அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.