ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்தியா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛திருச்சிற்றம்பலம்'. அனிருத் இசை அமைத்திருக்கிறார். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக இப்படம் வெளியான தியேட்டர்களில் தனுஷின் ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்தபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது தனது மகன்கள் மற்றும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார் தனுஷ். அவர் மட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் மித்ரன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை ராஷி கண்ணா ஆகியோரும் ரோகினி தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்தார்கள்.