தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து வருவதால் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அதனால், ஷங்கர் தற்போது சென்னையில் 'இந்தியன் 2' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்தை விரைந்து முடித்துத் தருமாறு ஷங்கரிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியில் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறலாம் என்பதே எண்ணம்.
அதனால், ஷங்கர் தெலுங்குப் படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு வர உள்ளார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசி வருகிறார்களாம். அதற்குள் ராம் சரண் வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமான பின்புதான் எதுவும் உறுதியாகத் தெரிய வரும்.




