நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
நாவல் படிக்கும் ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் படித்த, படிக்கும் சரித்திர நாவலாக 'பொன்னியின் செல்வன்' இன்றும் இருக்கிறது. பலர் திரைப்படமாக எடுக்க முயற்சித்து நின்று போனதை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்திருக்கிறார்.
செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பாகம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் திடீரென கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அதன் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். நேற்று ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் போஸ்டர் வெளியிடப்பட்டது. இன்று வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி போஸ்டர் வெளியிடப்பட்டது. இரண்டு போஸ்டர்களுக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தினமும் ஒரு அறிமுகம் என்ற வரிசையில் நாளை அருள்மொழி வர்மன் ஆக நடிக்கும் ஜெயம் ரவி போஸ்டரும், அதற்கு மறுநாள் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா போஸ்டரும், அதற்கடுத்த நாள் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் போஸ்டரும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளார்கள். அவர்களது அறிமுகப் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. படம் பார்ப்பதற்கு முன்பு அந்தந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டால் தான் படம் பார்க்கும் போது ஒன்றிப் பார்க்க முடியும்.
இந்த வாரக் கடைசியில் அல்லது அடுத்த வாரத் துவக்கத்தில் படத்தின் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.