பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த மேல்விலாசம் மற்றும் அப்போதேகேறி என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மாதவ் ராமதாஸ்.. இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக மேல்விலாசம் திரைப்படம் ஒரு நீதிமன்ற அறையிலேயே ஒண்ணே முக்கால் மணி நேரம் வெறும் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.. அதேபோல மருத்துவமனையை மையப்படுத்தி உருவாகி இருந்த அப்போதேகேறி படமும் மருத்துவம், ஆன்மா கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாதவ் ராம்தாஸ் முதன்முதலாக தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த தகவலை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாதவ் ராம்தாஸ்