ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த மேல்விலாசம் மற்றும் அப்போதேகேறி என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மாதவ் ராமதாஸ்.. இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக மேல்விலாசம் திரைப்படம் ஒரு நீதிமன்ற அறையிலேயே ஒண்ணே முக்கால் மணி நேரம் வெறும் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.. அதேபோல மருத்துவமனையை மையப்படுத்தி உருவாகி இருந்த அப்போதேகேறி படமும் மருத்துவம், ஆன்மா கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாதவ் ராம்தாஸ் முதன்முதலாக தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த தகவலை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாதவ் ராம்தாஸ்