பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விஜய் தற்போது முதன்முறையாக நேரடியாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத வகையில் உருவாக்க வேண்டுமென, தமிழ் நடிகர்களான சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு என பார்த்து பார்த்து தேர்வு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் பிரபு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தெறி படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் பிரபு.
பிரபுவை பொருத்தவரை கடந்த 2010க்குப்பின் தெலுங்கில் ஒரு முக்கிய குணசித்திர நடிகர் ஆகவே மாறிவிட்டார். ஆனாலும் கடந்த 2013ல் வெளியான ஓங்கோல் கீதா என்கிற தெலுங்கு படத்தில் நடித்த பிரபு, அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பது பற்றிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை ஜெயசுதாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.