சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஷால் தற்போது லத்தி படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் இந்த படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.
ஒருவேளை விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கலாம் என தீர்மானித்தால் மட்டுமே தொடர்ந்து அந்த படம் படப்பிடிப்பு என்கிற நிலைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.