22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா அலை காரணமாக தள்ளிப் போடப்பட்டு இப்போதுதான் வெளியாக உள்ளது. இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' அலை காரணமாக ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களின் நிலை தடுமாற்றம் கண்டுள்ளது. தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் கடைசி கமர்ஷியல் படமான 'ஜேம்ஸ்' ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஹிந்தியில் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கான தியேட்டர்களும் குறையும் என்கிறார்கள். நாளையுடன் 'வலிமை' படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25ல் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
'ஜேம்ஸ்' இயக்குனரான சேத்தன் குமார் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜேம்ஸ்' படத்தை தியேட்டர்காரர்கள் தூக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அந்தப் படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' அதிகம் வந்தால் 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக வசூல் செய்யும் என தெலுங்குத் திரையுலகில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.