பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் டூ ஓவர். ஷார்வி இயக்கி உள்ளார். மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா நடித்துள்ளனர். ரியல் இமேஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ். சரவணன் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறியதாவது: ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அதனால் ஏற்படும் குடும்ப சூழல். இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல், அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது.
விஷயங்கள் எவ்வளவு இருண்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கை, இலக்குகள் உட்பட, எதனையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே கதையின் கருத்தாகும். என்றார்.