'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

ரெட்டைச் சுழி, நெடுஞ்சாலை, மாயா என பல படங்களில் நடித்துள்ள ஆரி அர்ஜுனன் தற்போது அலேகா, பகவான், நெஞ்சுக்கு நீதி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வென்றார்.
இந்த நிலையில் கள்ளன் படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன், சினிமா விமர்சகரும், ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறனை எச்சரித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, மாறன் திரைப்படங்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர் எங்கிருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார் தன்னுடைய கடினமான உழைப்பினால் உயர்ந்து வெற்றி பெற்றவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்திருப்பவர். அப்படிப்பட்டவரை புரோட்டா மாவு பிசைந்த மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய வன்மம் என்று கூறி அவரை எச்சரித்திருக்கிறார் ஆரி அர்ஜுனன். அவரது இந்த எதிர்ப்பு செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.