கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' |
ஏஐ தொழில்நுட்டம் தற்போது சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'நைசா' என்ற முதல் ஏஐ தொழில்நுட்ப படம் சமீபத்தில் வெளியானது. கன்னடத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா 'சிரஞ்சீவி அனுமன்' என்ற ஏஐ தொழில்நுட்ப படத்தை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்ப திரைப்படங்கள் எதிர்காலத்தில், சினிமாவில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும். இப்படிப்பட்ட ஏ.ஐ. திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
இதை எதிர்க்கும் வகையில், ஏஐ படங்களை விட்டு நடிகர்கள் வெளியேற வேண்டும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பதுதான் இதுபோன்ற நிறுவனங்களின் பணி. ஆனால் தற்போது அவர்களின் இலக்கு பணத்தின் மீது மட்டும்தான் உள்ளது. என்று கூறியிருக்கிறார்.