இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தமிழ் சினிமா இசை என்பது காலங்கள் கடந்து நிற்கும் ஒரு இசையாக உள்ளது. கே.வி.மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் பாடல்களை மற்ற மொழி சினிமா ரசிகர்களும் கேட்டார்கள், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், கேட்பார்கள்.
ஆனால், சமீபத்திய தமிழ் சினிமா இசையில் தமிழின் அழகு குறைந்து, கவிதை நயம் குறைந்து, ஆங்கிலக் கலப்புடன், மற்ற மொழிக் கலப்புடன் கூடிய பாடல்கள்தான் அதிகம் வருகிறது என சினிமா இசையை ஆத்மார்த்தமாக ரசிக்கும் பலரும் குறை சொல்வார்கள். இன்றைய இசையைமப்பாளர்களைக் கேட்டால் அதற்கு 'தலைமுறை இடைவெளி, டிரென்ட்' என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழில் சில படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தெலுங்கு பான் இந்தியா படங்களுடன் தமிழ் சினிமாவும் போட்டியிட விரும்புகிறது. தமிழ்ப் பாடல்கள் கூட ஆங்கிலத்தில் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள ராக் பேண்டு குழுவினர் தமிழுக்கு வந்து, 'ஐயாம் கமிங் பார் யு, ஐயாம் கன்னிங் பார் யு' என திடீரென பாட ஆரம்பித்துவிட்டார்கள். இது தமிழ் சினிமா இசை அல்ல. தமிழ் சினிமா பாடல்களை நாங்கள் ஹிந்தியில் வாங்கிய காலம் ஒன்று இருந்தது. ராஜா சார் முதல் மற்றவர்கள் வரை வாங்கியிருக்கிறோம். இப்போது அவை எனக்குப் புரியவில்லை,” என்று பேசியிருக்கிறார்.