லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே புதிய ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்த புதிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தயாரிப்பாளர்கள் அனைவரும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பள தொகையினை மட்டுமே படப்பிடிப்பின்போது அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.