இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல்ஹாசன் 5 வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். அவரே கோவை தொகுதியில் தோற்றார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தார்.
இதன் காரணமாக தற்போது அரசியலை சற்று குறைத்துக் கொண்டு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன் முதல் கட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது விக்ரம் படத்தில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்ததைய பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை வருகிற 14ம் தேதி காலை 7 மணிக்கு கமல் அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். அதற்கு ஷங்கர் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தவிர அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்கும் படங்கள் உள்ளன. இதனால் சினிமாவில் இனி அவரை நிறைவாக காணலாம்.