மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். இப்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தி தேர்ஸ்டே என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடவும், அவர்களது மறுவாழ்வுக்காக பணியாற்றவும் முன்வந்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து ஆதரவளித்து செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோர்த்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினைகளில் பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களிடம் இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என்.ஜி.ஓக்களுடன் எனது தொடர்பு ஆரம்பம் தான், எதிர்காலத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் உதவுவதில் மேலும் பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.