இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆண்டவன் கட்டளை. காக்காமுட்டை மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் இந்த படம் குஜராத்தி மொழியில் தற்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதை ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி கூழாங்கல், நெற்றிக்கண், ராக்கி, தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் ஆண்டவன் கட்டளை படத்தை குஜராத்தி மொழியில் இவர்கள் ரீமேக் செய்கின்றனர். படத்திற்கு சுப யாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் மனிஷ் சைனி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் குஜராத்தி நடிகர் மல்ஹார் தக்கார் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க, ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். இவர் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர்கள் இருவருடனும் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.