''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நேற்றுடன் 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இதனிடையே, தங்களது காதலின் ஆறு வருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜோடிப் புகைப்படங்களை வெளியிட்டு, “ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று தெரியவில்லை. நானும் ரௌடிதான் படத்தின் போது காத்து வாக்குல எடுத்த சில தருணங்கள்,” என தனது காதலைக் கொண்டாடுகிறார் விக்னேஷ் சிவன்.