2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு என்றாலும் இந்த வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜனவரி 7ம் தேதியன்று மூன்று புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகியது.
இந்த வாரம் பொங்கல் வாரம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' வெளிவராததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13ம் தேதி, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, மருத, நாய்சேகர்” ஆகிய படங்களும், ஜனவரி 14ம் தேதி 'எஜிபி, பாசக்காரப் பய, தேள்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தது.
தினசரி 3 காட்சிகள் ஓடினால் கூட போதும், போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படங்களை வெளியிடுகிறார்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்தே இவற்றின் வசூலும் அமையும்.