Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி'

12 ஜூன், 2025 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-princess-of-Maruthanad-Elavarasee-in-a-story-complaint-after-65-years


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த முக்கியமான படம் 'மருதநாட்டு இளவரசி'. இந்த படத்தில் அவர் வி.என்.ஜானகியோடு நடித்தார். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் இருவரும் காதல் கொண்டனர். அதனாலேயே இந்தப் படம் சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.

இந்த படத்தின் கதை, வசனத்தை கருணாநிதி எழுதினார், ஏ.காசிலிங்கம் இயக்கினார், எம்.எஸ்.ஞானமணி இசை அமைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.
1950ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் கதை என்னுடையது என்று 65 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2015ம் ஆண்டு பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி என்பவர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது: நானும், கருணாநிதியும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். நான் எழுதிய கதைகளை அவரிடம் காட்டி அவரது அபிப்ராயத்தை கேட்பது வழக்கம். அதன்படி 1949ம் ஆண்டு அவரிடம் ஒரு கதையை சொன்னேன். அந்த கதையை சில மாற்றங்களுடன் 'மருநாட்டு இளவரசியாக' மாற்றி விட்டார். படத்தில் இடம்பெற்ற பல வசனங்களும் நான் எழுதியதுதான். இது தொடர்பாக நான் அப்போதே கருணாநிதியோடு சண்டை போட்டேன்" என்றார்.
கருணாநிதி அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றுவிட்ட சக்திமிக்க தலைவராக இருந்ததால் இந்த புகார் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

புகார் கூறிய பி.கே.முத்துசாமி நாமக்கல்லை சேர்ந்தவர். "காவேரியின் கணவன்" படத்தில் இடம்பெற்ற "சின்ன நடை நடந்து வந்து" என்ற பாடல் உட்பட 60க்கும் மேற்பட்ட பாடல்களை முத்துசாமி எழுதியுள்ளார்.

நாடகத்திற்கு கதை, வசனம் எழுதிவந்த முத்துசாமி, 'தை பிறந்தால் வாழி பிறக்கும்' என்ற படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். அவரது மனைவி இறந்த பிறகு, அவர் நாமக்கல்லில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஏழை எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மாதம் 1500 ரூபாய் பணத்தில் வாழ்க்கை நடத்தினார்.

முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைப் புகழ்ந்து பல பாடல்களை பி.கே.முத்துசாமி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ... பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in