பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக பாதை மாறியவர் எஸ்ஜே சூர்யா. எப்படியோ தனது இலக்கான நடிப்புலகிற்கு மீண்டும் திரும்பிய எஸ்ஜே சூர்யா தனது எண்ணப்படியே இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். ஸ்பைடர், மாநாடு படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
இதில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் அவரது வில்லன் நடிப்பு ஹீரோவையே மிஞ்சும் விதமாக இருந்ததுடன் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளினார். இதைதொடர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான, ரசிகர்களின் வரவேற்பை பெரும் விதாமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஆதிக் ரவிவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் எஸ்ஜே.சூர்யா. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.