மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகரானவரும் சிம்பு தான். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளால் பரபரப்பாக பேசப்பட்டவரும் சிம்பு தான். இடையில் உடல் குண்டாகி பல்வேறு புகார்களுக்கு ஆளானவர், மாநாடு படம் மூலம் பழைய சிம்புவாக வந்துள்ளார். அதிகமாக காதல் சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு இப்போது ஆன்மிகம் பற்றியே அதிகம் பேசுகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஆன்மிக மாற்றம் பற்றிய கேள்விக்கு அளித்துள்ளார். அதில், 'எம்மதமும் சம்மதம்னு எல்லோரும் சும்மா பேச்சுக்குச் சொல்வாங்க. எங்க வீட்டுல தம்பி முஸ்லிமாக, தங்கச்சி கிறிஸ்துவராக, நான் இந்துவாக வாழ்க்கையை நடத்துறோம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசையா இருக்கு. எனக்காக சர்ச், கோயில், தர்ஹான்னு போறாங்க. நானே இந்தக் கொரோனா காலத்தில் கோயில்கள் திறந்த பின் 100 கோயில்களுக்கு மேலே போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்துட்டேன். வெள்ளிக்கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் அம்மா அப்பாவைப் பஞ்சாயத்துக்குக் கொண்டு போய் விடாமல் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




