பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் 'ஓ சொல்றியா மாமா…' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடியுள்ளார் சமந்தா. அப்பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
படத்தைப் பார்த்து சமந்தா கூறுகையில், “இது அல்லு அர்ஜுனைப் பாராட்டும் ஒரு பதிவு. ஒவ்வொரு நொடியும் உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதும் சிறப்பாக செயல்படும் போது அவரை விட்டு விலகிப் பார்ப்பது முடியாத ஒன்று. 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிகிறார். பேச்சு நடை, தோளை இறக்கி நடக்கும் நடை… அச்சோ... நிஜமாகவே பிரமிப்பு, மிவும் உத்வேகமான ஒன்று,” எனப் பாராட்டியுள்ளார்.
சமந்தாவின் பாராட்டிற்கு, “மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி டியர், தொட்டுவிட்டீர்கள்,” என அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.




