கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் ஜெயம் ரவி. அதையடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார். இது அவரது 30வது படமாகும். பெரும்பாலும் காதல் கலந்த காமெடி படங்களாக இயக்கி வந்துள்ள ராஜேஷ், ஜெயம் ரவி நடிக்கும் இந்தப்படத்தை குடும்ப கதையாக இயக்கப்போகிறார். 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.