'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ், தெலுங்கில் ஆரம்பமான டிவி நிகழ்ச்சி மாஸ்டர் செப். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி சில வாரங்கள் ஒளிபரப்பான பிறகு தெலுங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மேலும், சில காரணங்களால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீது தமன்னா வழக்கு தொடரவும் முடிவு செய்தார்.
இந்நிலையில் தமன்னாவுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நேற்று முதுல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “நீங்கள் வாருங்கள், நான் சம்பாதிக்கிறேன், நீங்கள் கிசுகிசு செய்யுங்கள், நான் பாஸ் ஆகிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமன்னா தொகுத்து வழங்கிய போது ரேட்டிங் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது, தற்போது அனசுயா தொகுத்து வழங்குவது எப்படி இருக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.