மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

தமிழ், தெலுங்கில் ஆரம்பமான டிவி நிகழ்ச்சி மாஸ்டர் செப். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி சில வாரங்கள் ஒளிபரப்பான பிறகு தெலுங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மேலும், சில காரணங்களால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீது தமன்னா வழக்கு தொடரவும் முடிவு செய்தார்.
இந்நிலையில் தமன்னாவுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நேற்று முதுல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “நீங்கள் வாருங்கள், நான் சம்பாதிக்கிறேன், நீங்கள் கிசுகிசு செய்யுங்கள், நான் பாஸ் ஆகிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமன்னா தொகுத்து வழங்கிய போது ரேட்டிங் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது, தற்போது அனசுயா தொகுத்து வழங்குவது எப்படி இருக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.




