30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மதியம் முதலே சமூக வலைத்தளங்களில் புனித் பற்றிய பதிவுகள் மிக அதிகமாக இடம் பெற்று வருகிறது.
அவரது படங்களைப் பார்க்காதவர்களும், அவரைப் பற்றித் தெரியாதவர்களும் கூட அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் செய்த பல சமூக சேவைகளும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. அனாதை இல்லம், முதியோர் இல்லம், கால்நடை பராமரிப்பு இல்லாம், ஏழை மக்களுக்கான படிப்பு வசதி என பலவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.
பொது நிகழ்வாக தனது அண்ணனின் திரைப்பட விழாவில் கடைசியாகக் கலந்து கொண்டார் புனித் ராஜ்குமார். மேலும் நேற்று காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதுதான் அவர் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படமாக அமைந்துவிட்டது.
இந்தியத் திரையுலகத்தினர் பலரும் புனித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். சிலர் நேரில் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.