மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு திரையிலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான இவர், தற்போது ரங்கா மார்த்தாண்டா என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஒடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதற்காக தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கோ அல்லது படத்தின் கதை சொல்லியாகவோ குரல் கொடுப்பதற்கு நடிகர் சிரஞ்சீவியிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கி வைத்திருந்தார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஒய்வு எடுத்து வருவதால் அவரை டப்பிங் பேச அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்துள்ளார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சிரஞ்சீவி தானாகவே அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதோடு சொன்னபடி வந்து டப்பிங்கு பேசி கொடுத்துள்ளார். அன்னைய்யாவின் அன்புக்கு ஈடு இல்லை என சிரஞ்சீவியின் இந்த செயல் பற்றி சோஷியல் மீடியாவில் உருகியுள்ளார் கிருஷ்ண வம்சி.