மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கு திரையிலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான இவர், தற்போது ரங்கா மார்த்தாண்டா என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஒடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதற்காக தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கோ அல்லது படத்தின் கதை சொல்லியாகவோ குரல் கொடுப்பதற்கு நடிகர் சிரஞ்சீவியிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கி வைத்திருந்தார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஒய்வு எடுத்து வருவதால் அவரை டப்பிங் பேச அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்துள்ளார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சிரஞ்சீவி தானாகவே அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதோடு சொன்னபடி வந்து டப்பிங்கு பேசி கொடுத்துள்ளார். அன்னைய்யாவின் அன்புக்கு ஈடு இல்லை என சிரஞ்சீவியின் இந்த செயல் பற்றி சோஷியல் மீடியாவில் உருகியுள்ளார் கிருஷ்ண வம்சி.