பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இதில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில், தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்த போதும் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாகவும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார்.