கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலுக்கு வந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை ஆந்திராவில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரோஜா அமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சிலர் டைம்பாசுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு, அடுத்த நாள் ஆன்மிக பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வர வேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள். அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.