சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக நடிக்க விக்ரமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜமவுலி. ஆனால் அவர் அப்பா வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதை அடுத்து தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது மகேஷ் பாபுவுக்கு 49 வயதாகிறது. மாதவனுக்கு 55 வயதாகிறது.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடைபெற உள்ளது. அப்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ராவுடன் மாதவன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.