கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ், அனுஷ்கா காதல் குறித்த செய்திகள் வெளியானபோது அதை அவர்கள் இருவரும் மறுத்தார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் அனுஷ்கா, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது காட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ‛‛நான் ஆறாவது படிக்கும் போது, என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னை காதலிப்பதாக கூறினான். உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும் கூறினான். அப்போது காதல் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. என்றாலும் அவன் காதலை ஏற்றுக் கொண்டேன். காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த காதல் அனுபவத்தை இப்போது வரை என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிய அனுபவமாக பாதுகாத்து வருகிறேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.