'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் ‛என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் திலீப் உடன் இணைந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதனால் இருவர் பற்றி அதிகம் கிசுகிசுகளும் எழுந்தன. இதன் காரணமாகவே நடிகர் திலீப் அவரது மனைவி மஞ்சு வாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை காவ்யா மாதவனையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியாருக்கும் பிறந்த மீனாட்சி என்கிற மகளும் தற்போது இவர்கள் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மஞ்சு வாரியரின் தாயார் பிறந்தநாளும் மகள் மகாலட்சுமியின் பிறந்தநாளும் ஒரே நாளில் தான் வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.