கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சினிமா உலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு அதிர்ஷ்டம், இல்லை, இல்லை, பேரதிர்ஷ்டம் கன்னட இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு அமைந்தது. 2022ல் சுமார் 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்தப் படத்திற்காக ரிஷப் வாங்கிய சம்பளம் வெறும் 4 கோடி என்கிறார்கள்.
ஆனால், தற்போது உருவாகி வரும் 'காந்தாரா' படத்தின் முன் பகுதி படமான 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ரிஷப் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதம் பங்கைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் இன்னும் அதிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தை 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்கள். படத்தின் வியாபாரம் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறதாம்.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் 2 கோடி சம்பளம் வாங்கினால் கூடவே ஒரு கோடி கூடுதலாக சம்பளம் கேட்பதுதான் வழக்கம். ரிஷப் கேட்கும் சம்பளத்தைக் கணக்கிட்டால் அது 25 மடங்கு அதிகமாக இருக்கிறது.