தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
மலையாள சினிமாவின் ஆக்சன் பட இயக்குனர்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இவர், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருக்கிறார். இந்தநிலையில் இவரது பல வெற்றிப்படங்களில் நடித்த சுரேஷ்கோபி, இவரை கைதூக்கி விடும் விதமாக நட்புக்கரம் நீட்டியுள்ளார். அந்தவகையில் பாப்பன் என்கிற படம் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை கனிகா இணைந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே ஜோஷி டைரக்சனில், 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தில் சுரேஷ்கோபிக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 'பாப்பன்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜோஷியுடனும் சுரேஷ்கோபியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனிகா, “மீண்டும் என் குடும்பத்தில் இணைந்தது போல உள்ளது” என கூறியுள்ளார்.