தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மலையாள சினிமாவின் ஆக்சன் பட இயக்குனர்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இவர், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருக்கிறார். இந்தநிலையில் இவரது பல வெற்றிப்படங்களில் நடித்த சுரேஷ்கோபி, இவரை கைதூக்கி விடும் விதமாக நட்புக்கரம் நீட்டியுள்ளார். அந்தவகையில் பாப்பன் என்கிற படம் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை கனிகா இணைந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே ஜோஷி டைரக்சனில், 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தில் சுரேஷ்கோபிக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 'பாப்பன்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜோஷியுடனும் சுரேஷ்கோபியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனிகா, “மீண்டும் என் குடும்பத்தில் இணைந்தது போல உள்ளது” என கூறியுள்ளார்.