புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை, இந்த வருடம் ஜன-13 முதல் இயங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. அதேசமயம் மூன்று காட்சிகளை மட்டுமே நடத்தி கொள்ளலாம் என்றும் இரவு 9 மணிக்கு மேல் படங்களை திரையிட கூடாது என்று நிபந்தனையும் விதித்திருந்தது. கேரளாவை பொறுத்தவரை செகன்ட் ஷோக்களில் தான் அதிக அளவு வசூலாவது வழக்கம் இதனால் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே தியேட்டர் ரிலீஸை தவிர்த்து ஓடிடி தளங்களை தேடி சென்றன..
இந்த நிலையில் வரும் நாளை (மார்ச்-11) முதல் இரவு 9 மணி காட்சியையும் திரையிடலாம் என, கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படம், நாளை (மார்ச்-11) ரிலீஸாகும் என உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த மார்ச்-4ஆம் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப்படம், திடீரென ரிலீஸ் தேதியை கேன்சல் செய்தது. அதற்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் யோசித்து வந்தநிலையில் தான், அரசின் நிபந்தனை தளர்வு அவர்களது முடிவை மாற்றிவிட்டது..