இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் |
கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை, இந்த வருடம் ஜன-13 முதல் இயங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. அதேசமயம் மூன்று காட்சிகளை மட்டுமே நடத்தி கொள்ளலாம் என்றும் இரவு 9 மணிக்கு மேல் படங்களை திரையிட கூடாது என்று நிபந்தனையும் விதித்திருந்தது. கேரளாவை பொறுத்தவரை செகன்ட் ஷோக்களில் தான் அதிக அளவு வசூலாவது வழக்கம் இதனால் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே தியேட்டர் ரிலீஸை தவிர்த்து ஓடிடி தளங்களை தேடி சென்றன..
இந்த நிலையில் வரும் நாளை (மார்ச்-11) முதல் இரவு 9 மணி காட்சியையும் திரையிடலாம் என, கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படம், நாளை (மார்ச்-11) ரிலீஸாகும் என உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த மார்ச்-4ஆம் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப்படம், திடீரென ரிலீஸ் தேதியை கேன்சல் செய்தது. அதற்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் யோசித்து வந்தநிலையில் தான், அரசின் நிபந்தனை தளர்வு அவர்களது முடிவை மாற்றிவிட்டது..