26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

கடந்த 2006ல் ஜோதிகா, குஷ்பூ, சரிதா ஆகியோர் இணைந்து நடித்து தமிழில் வெளியான படம் 'ஜூன் ஆர்'. இந்த படத்தை ரேவதி எஸ் வர்மா என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து 2012ல் 'மேட் டாட்' என்கிற படத்தை இயக்கியவர், கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது 'இ வளையம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இன்று (ஜூன்-13) இந்த படம் வெளியாகி உள்ளது. மொபைல் போன் இல்லாமையால் ஏற்படும் பதட்டம், தவிப்பு ஆகியவற்றால் ஏற்படும் நோமோபோபியா என்கிற ஒரு வகை பாதிப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
குறிப்பாக டீனேஜுக்கு உட்பட்ட இளைஞர்களும் குழந்தைகளும் மொபைல் போன் மூலமாக சந்திக்கும் பிரச்னைகளை இந்த படம் பேசுகிறது. இது ஒரு விழிப்புணர்வு படம் என்பதை கருத்தில் கொண்டு கேரள அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி இன்று கொச்சியில் ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள், பெற்றோர் சங்கத்தினர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் ஆகியோருக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்டு காட்டப்பட்டது.




