பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவருக்கு பின் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்த பின்னரும் கூட, தற்போது வரை நம்பர் ஒன் இடத்திலேயே தொடர்ந்து பயணித்து வருகிறார். பல்வேறு விதமான கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது திரையுலக பயணம், வாழ்நாள் சாதனை ஆகியவற்றை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்தியாவில் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.
இதன்மூலம் கேரளாவிற்கு மலையாள திரையுலகிற்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்த மோகன்லாலுக்கு மிக பிரம்மாண்டமான விழா எடுத்து கவுரவிக்க இருக்கிறது கேரள அரசு. இந்த விழா வரும் அக்டோபர் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லால் சலாம் என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் கேரள கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் சாஜி செரியன்.