திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த 2017ல் 'தொண்டிமுதலும் திரிக் சாட்சியமும்' என்கிற படம் வெளியானது. இதற்கு முந்தைய வருடம் தான் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் திலீஷ் போத்தன் தான் இந்த படத்தை இயக்கினார். இதற்கு கதை மற்றும் திரைக்கதையை கதாசிரியர் சஜீவ் பழூர் எழுதியிருந்தார். இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்கிற பிரிவில் தேசிய விருதும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாகி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சஜீவ் பழூர். இந்த படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடித்துள்ளார். இவர் தமிழில் 'கருங்காலி', தெலுங்கில் 'மந்த்ரா 2, ராஜு காரி கதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தற்போது கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜென்டில்மேன் 2' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படமாக இது உருவாகிறது.