பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானாலும் 2008 முதல்தான் அடுத்தடுத்து பல 100 கோடி படங்கள் வர ஆரம்பித்தது. இப்போது 100 கோடி என்பதை விட 1000 கோடி என்பதுதான் ஒரு பெரும் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மலையாளத் திரையுலகத்தில் அவர்களது மாநிலமான கேரளாவில் இதுவரையில் எந்த ஒரு படமும் 100 கோடி வசூல் சாதனையைப் புரிந்ததில்லை. தற்போது அப்படிப்பட்ட ஒரு புதிய சாதனையை முதல் சாதனையைப் படைத்துள்ளது மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' மலையாளப் படம்.
உலக அளவில் மொத்தமாக 200 கோடி வசூலைப் பெற்றுள்ள படம் கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூல் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மோகன்லால் நடித்து அதிக பொருட்செலவில் தயாரான 'எல் 2 எம்புரான்' படம் கூட அங்கு 100 கோடி வசூலிக்கவில்லை. ஆனால், குறைந்த பொருட்செலவில் தயாரான 'தொடரும்' படம் இப்படி ஒரு சாதனையைப் படைத்திருப்பது பெரிய விஷயம்.
இத்தனைக்கும் மோகன்லால் நடித்து வந்த 'த்ரிஷ்யம்' படம் அளவிற்கு இப்படம் தரமான ஒரு படம் என்ற பெயரைப் பெறவில்லை. இருப்பினும் வசூலில் சாதனை புரிவதுதான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.