ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இதுவரை உலக அளவில் 200 கோடி வசூலித்துள்ளது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பலர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மோசமான போலீஸ் அதிகாரிகளாக நடித்த சீனியர் வில்லன் பினு பப்பு மற்றும் இந்த படத்தில் தான் அறிமுகமாகியுள்ள பிரகாஷ் வர்மா ஆகியோரும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்ல சில காட்சிகளில் வந்தாலும் இந்த கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாக, வில்லன் பிரகாஷ் வர்மாவின் மகளாக நடித்திருந்த ஆர்ஷா பைஜூ என்பவரும் தற்போது ரசிகர்களிடம் வெளிச்சம் பெற்றுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவர் மோகன்லால் உடன் இணைந்து நடித்திருந்தார்.
மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறும்போது, “மோகன்லாலை பார்த்து வளர்ந்த நான், இன்று அவருடனேயே படத்தில் நடித்தது கனவு நனவான தருணம் என்று தான் சொல்ல வேண்டும். தன்னால் ஒரு காட்சி ரீ டேக் ஆகிவிட்டால், நான் ஒரு வளரும் நடிகை, வயதில் சிறியவள் என்று கூட நினைக்காமல் மன்னித்துக் கொள் மகளே இன்னொரு டேக் போகலாமா என்று ஸாரி கேட்பார்.
அதேபோல ஒரு காட்சியை எடுக்கும்போது மகளே இந்தக் காட்சிக்கு டைட் பிரேம் வைத்திருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் நகர்ந்து நில் என்று சொல்வார். பொதுவாக இது படப்பிடிப்பில் உதவி இயக்குனர் செய்யும் பணி. ஆனால் இது போன்ற விஷயங்களை கவனித்து சரி செய்வார் மோகன்லால். இதெல்லாம் தொழில் மீது அவர் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது” என்று பிரமிப்பு விலகாமல் கூறுகிறார் ஆர்ஷா பைஜூ.